2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இரத்ததான நிகழ்வு

Thipaan   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பொ. சோபிகா


எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள 140ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு, யாழ். அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள், இன்று(24) இரத்ததானம் வழங்கினர்.

இந்நிகழ்வானது, வடமாகாண பிரதம தபால் அதிபர் என். ரட்ணசிங்கம் தலைமையில் யாழ். அஞ்சல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் 30 ற்கும்  மேற்ப்பட்ட ஊழியர்கள் இரத்தானம் செய்ததுடன், வழங்கப்பட்ட இரத்தத்தை யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினர் சேகரித்து சென்றனர்.

அஞ்சல் தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக இந்த இரத்தான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டதாக வடமாகாண பிரதம தபால் அதிபர் கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .