2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வாள்வெட்டில் மூவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

யாழ். தெல்லிப்பழை பகுதியில் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வாள்வெட்டில் படுகாயமடைந்த மல்லாகம் நீதிமன்ற வீதியை சேர்ந்த சந்திரசேகரம் கொலின்ஸ் (வயது 20), தேவராசா ஜெகநாதன் (வயது 23) ஆகிய இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையிலும் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதி கண்ணகி முகாமை சேர்ந்த சின்னராசா யூட் அன்ரனி (வயது 23) என்பவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2 மோட்டார் சைக்கிள்களில் ஞாயிற்றுக்கிழமை (28) இரவு வந்த 4 பேர், இவர்கள் மீது வாள்வெட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றதாகவும்  பொலிஸார் கூறினர்.

இந்த வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .