2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியலில்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன

 எரிபொருள் தீர்ந்த நிலையில் படகுடன் யாழ்.நெடுந்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய 4 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் திங்கட்கிழமை (29) உத்தரவிட்டார்.

அத்துடன், எரிபொருள் தீர்ந்த நிலையில் மீட்கப்பட்ட படகையும் தடுத்து வைக்கும்படியும் நீதவான் உத்தரவிட்டார்.

இந்திய இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மேற்படி மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை கைதுசெய்யப்பட்டு, நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து நெடுந்தீவு பொலிஸார் மேற்படி மீனவர்களை ஊர்;காவற்றுறை நீதவான் முன்னிலையில் திங்கட்கிழமை (29) மாலை ஆஜர்ப்படுத்தினார்கள்.

இதன்போதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .