2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அத்திபாரம் வெட்டிய இடத்தில் கைக்குண்டுகள்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 05 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


வல்வெட்டித்துறை, கம்பர்மலை பகுதியில் புதைத்து வைக்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகளை சனிக்கிழமை (04) மாலை மீட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் கூறினார்.

மதில் கட்டுவதற்காக அத்திபாரம் வெட்டிய வேளையில் குண்டுகள் இருப்பதை அவதானித்த வீட்டு உரிமையாளர், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலின் பிரகாரம் இராணுவத்தினருடன் சென்று குண்டுகளை மீட்டதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .