2025 ஜூலை 14, திங்கட்கிழமை

காணி உறுதிகள் வழங்கி வைப்பு

Gavitha   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா


தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் யாழ். மாவட்டத்தில் காணி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கான  உறுதிகளை கையளிக்கும் நிகழ்வு யாழ். கிறிஸ்தவ வாலிபர் சங்க மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது.

 அரச காணிகளிலிருந்து 1980ஆம் ஆண்டு முதல் காணிகளை பெற்றுக்கொண்ட 53 பேருக்கான காணி உறுதிகள் இதன்போது வழங்கப்பட்டன.
அத்துடன், தேசிய வீடமைப்பு அமைச்சின் நிதியுதவியின் கீழ், 51 அரச உத்தியோகஸ்தர்களுக்கான வீடமைப்பு கடன் திட்டத்தின் முதற்கட்டமாக தலா 5 இலட்சத்திற்குரிய காசோலைகளும் வழங்கப்பட்டன.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா காணி உறுதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களிற்கான காசோலைகள் ஆகியவற்றை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் யாழ்.மாவட்ட முகாமையாளர் எம்.இரவீந்திரன், முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .