2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சபாபதிப்பிள்ளை முகாமை மக்கள் - பிரிட்டன் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் சந்திப்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா, நா.நவரத்தினராசா


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளான லோறா டெவிஸ் மற்றும் மைக்கல் ஆகியோர் மருதனார்மடம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாம் மக்களை புதன்கிழமை (15) சந்தித்து கலந்துரையாடினர்.

அவர்களுடன் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் மற்றும் வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோரும் அவர்களுடன் சென்றிருந்தனர்.

தங்களை அடிக்கடி அதிகமானவர்கள் வந்து பார்க்கின்ற போதும், எதுவித நன்மைகளும் தங்களுக்கு விளையவில்லை என அம்மக்கள் தெரிவித்தனர்.

வெளிநாட்;டிலிருந்து பல தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் எம்மை பார்வையிடுவதற்கு வருவார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எம்மை பார்வையிட வரவில்லை.

அத்துடன், மக்கள் தங்கள் தேவைகளை உயர்ஸ்தானிக அதிகாரிகளிடம் எடுத்து கூறினார்கள். மக்கள் தங்களை மீண்டும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக்கொண்டனர்.

நலன்புரி மக்களின் கல்வி நடவடிக்கைகள், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பற்றியும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் உயர்ஸ்தானிகர்கள் கேட்டறிந்து சென்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .