2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மகளை தாக்கிய தந்தைக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ்.கரவெட்டி கிழக்கு கட்டைவேலி பகுதியில் மகளை பொல்லால் தாக்கிய தந்தையை எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி வியாழக்கிழமை (16) உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேகநபர் மதுபோதையில் புதன்கிழமை (15) காலை வீட்டிற்கு சென்று, தனது 15 வயது மகளை பொல்லால் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மகள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நெல்லியடி பொலிஸார் தந்தையான சந்தேகநபரை புதன்கிழமை (15) மாலை கைது செய்தனர்.

தொடர்ந்து, சந்தேகநபரை வியாழக்கிழமை (16) யாழ்.சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .