2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மின்சாரம் தாக்கி இராணுவ வீரர் பலி

Gavitha   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ். பருத்தித்துறை கற்கோவளம் இராணுவ முகாமில், மின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் ஒருவர் சனிக்கிழமை (18) உயிரிழந்துள்ளதாக, பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை, பலகமே என்ற இடத்தைச் சேர்ந்த ரி.ஜி.டி.பண்டார என்ற இராணுவ சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர், 551ஆவது படைப்பிரிவின் 20 எஸ்.எல்.என்.ஜி. வகையை சேர்ந்த இராணுவ வீரர் என பொலிஸார் மேலும் கூறினர்.

இவரது சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .