2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

புறா திருடன் கைது

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், துன்னாலை, தாமரைக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றின் கூட்டிலிருந்த புறாக்களை திருடிய சந்தேகநபர் ஒருவரை புதன்கிழமை (22) இரவு கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் வியாழக்கிழமை (23) தெரிவித்தனர்.

வீட்டிலிருந்த நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர் வெளியில் வந்த போது, நபர் ஒருவர் கூட்டிலிருந்த புறாக்களை பைகளில் போட்டுக்கொண்டிருந்தார்.

இதனையடுத்து, மேற்படி நபரை மடக்கி பிடித்த வீட்டு உரிமையாளர்கள், அவரை நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .