2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

திருட்டு மின்சாரம் பெற்ற இருவருக்கு பிணை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 11 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ்ப்பாணம், கரவெட்டி பகுதியில் திருட்டு மின்சாரம் பெற்ற இரு சந்தேகநபர்களை தலா 1 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல பருத்தித்துறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் திங்கட்கிழமை (10) அனுமதியளித்தார்.

அத்துடன், இது தொடர்பான வழக்கை டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

சுன்னாகம் மின்சார சபை அதிகாரிகளுடன் இணைந்து நெல்லியடி பொலிஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) இரவு கரவெட்டி பிரதேசத்தில் நடத்திய சோதனை நடவடிக்கையில், கரவெட்டி வடக்கை சேர்ந்த ஒருவரும், கரணவாய் தெற்கை சேர்ந்த ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், சந்தேகநபர்கள் திருட்டு மின்சாரம் பெறுவதற்கு பயன்படுத்திய மின்சார இணைப்புக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .