2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

முக்கொலை சந்தேகநபர் தற்கொலை முயற்சி

Gavitha   / 2014 நவம்பர் 15 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் முக்கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொ.தனஞ்சயன் வெள்ளிக்கிழமை (14) தற்கொலை முயற்சி செய்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெஞ்சுவலி காரணமாக சிறைச்சாலை அலுவலர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனஞ்செயன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது, அவர் அதிக மருந்து உட்கொண்டமை தெரியவந்ததுள்ளது.

இதனையடுத்து, சிகிச்சையளிக்கப்பட்டு தனஞ்செயன் தற்போது அவசர சிகிச்சைப்பிரிவிலிருந்து விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அச்சுவேலி காதிரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் ஆகிய மூவரை வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து இக்கொலைகளுடன் தொடர்புடையவர் என்று படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தர்மிகாவின் கணவரான பொ.தனஞ்செயன் ஊரெழு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

தர்மிகாவின் சகோதரியும் இந்த வாள்வெட்டில் பலியாகியிருந்தவருமான மதுசாவை இரண்டாவதாகத் திருமணம் செய்ய முடியாத நிலையிலே குறித்த நபர் (தர்மிகாவின் கணவர்) மேற்படி படுகொலையினைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .