2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின

George   / 2014 நவம்பர் 16 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா


சரக்கு ரயில் தடம்புரண்டமையால் பாதிக்கப்பட்ட வடக்கிற்கான ரயில் சேவைகள், 1 ½ மணி நேர தாமதத்தின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ். புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன், ஞாயிற்றுக்கிழமை (16) கூறினார்.

எரிபொருள் ஏற்றி சென்ற ரயிலொன்று ஹரியால மற்றும் கனேவத்தைக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) தடம்புரண்டது.

இதனால், வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதனையடுத்து, தடம்புரண்ட ரயிலை சீர் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, 1 ½ மணித்தியால தாமதத்தின் பின்னர் தற்போது ரயில் சேவைகள் சீராக இயங்க தொடங்கியுள்ளன.

அத்துடன், யாழிலிருந்து கொழும்பிற்கான ரயில்களும், கொழும்பிலிருந்து யாழிற்கான ரயில்களும் சீராக சேவையில் ஈடுபடுவதாக அவர் மேலும் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .