2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இரண்டு பாடசாலைக்கு ஒரு ஆசிரியர்

Thipaan   / 2014 நவம்பர் 18 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


- போ.சோபிகா


வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில், சில பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை தற்போது நிலவுவதால் ஒரு ஆசிரியர் இரண்டு பாடசாலைகளில் கல்வி கற்பித்து வருவதாக, வலிகாமம் கல்வி பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா, செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சங்கீதம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம், மனைப்பொருளியல், ஊடகவியல், விவசாயம் போன்ற பாடங்களுக்கு, வலிகாமம் பகுதியிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றன.

அத்துடன், வலிகாமம் கல்வி வலயத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள், தற்காலிக இணைப்பு பெற்று வன்னிப்பகுதியில் கடமையாற்றுவதற்கு இடமாற்றம் செய்யப்படுவதால் ஆசிரியர்கள் பற்றாக்குறை மேலும் நீடிக்கின்றது.

தேவைப்படும் ஆசிரியர்கள் கிடைக்கப்பெற்றால் அவர்களை தேவையான பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .