2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஆலையில் பொருட்கள் திருட்டு

George   / 2014 நவம்பர் 22 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ். பருத்தித்துறை முனைப்பகுதியில் அமைந்துள்ள அரைக்கும் ஆலையில் 4 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள், வியாழக்கிழமை (20) இரவு திருட்டுப்போயுள்ளதாக உரிமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலையில் முன்கதவு உடைக்கப்பட்டு, அரைக்கும் இயந்திரங்களுடன் பொருத்தப்பட்டுள்ள 2 மோட்டார்கள், அரைக்கும் உபகரணங்கள், பொருத்தும் கருவிகள் என்பனவே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை (21) காலையில் ஆலைக்கு வந்தவேளையிலேயே ஆலையில் திருட்டுப்போயுள்ளமை உரிமையாளருக்கு தெரியவந்துள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பருத்தித்துறை பொலிஸார் கூறினார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .