2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற இருவர் கைது

Gavitha   / 2014 நவம்பர் 23 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ற.றஜீவன்

யாழ். பருத்தித்துறை தம்பசிட்டி பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற இருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (23) பருத்தித்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் சுன்னாகம் கிளையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, இவ்விருவரையும் கைதுசெய்ததாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .