2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

George   / 2014 நவம்பர் 24 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவில் பணியாற்றி வந்த கான்ஸ்டபிள் தர உத்தியோகத்தர் ஒருவர் அவரது விடுதியிலிருந்து, திங்கட்கிழமை (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை தெஹியத்தகண்டியை சேர்ந்த என்.ரத்நாயக்க (வயது 27) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்ற மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர், ஞாயிற்றுக்கிழமை (23) மீண்டும் பணிக்கு திரும்பியிருந்த நிலையில் திங்கட்கிழமை (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .