2025 ஜூலை 16, புதன்கிழமை

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடலில் 87 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் புதன்கிழமை (15) உத்தரவிட்டார்.

படகில் கஞ்சா கொண்டு வந்த இரண்டு சந்தேகநபர்களும் கடந்த 10ஆம் திகதி நெடுந்தீவுக் கடற்பரப்பில் இருந்து 6 கடல் மைல் தூரத்தில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஊர்காவற்றுறை நீதிமன்ற அனுமதி பெற்று 96 மணித்தியாலங்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து சந்தேகநபர்கள் விசாரணை செய்யப்பட்டனர். விசாரணை முடிவுற்றதும் சந்தேகநபர்கள் புதன்கிழமை (15) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .