Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Kogilavani / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.அரசரட்ணம்
முல்லைத்தீவு, நாயாறு கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த 13 மீனவர்களில் 12 மீனவர்களுக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.ஷம்சுதீன் தலா 8000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மீனவர்களுடன் கைதான 15 வயதுச் சிறுவனை எச்சரிக்கை செய்த நீதவான், தொழிலுக்குச் செல்லாமல் பாடசாலை செல்லுமாறு அறிவுறுத்தினார்.
முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப்பணிப்பாளர் இ.சுதாகரன் தலைமையில் நாயாறு கடற்பரப்பில் புதன்கிழமை (22) நடத்திய சோதனை நடவடிக்கையின்போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 1 சிறுவன் உட்பட 13 பேரைக் கைதுசெய்தனர்.
இவர்களிடமிருந்து, தங்கூசி, கூட்டு வலைகளை என்பன மீட்கப்பட்டதுடன் பிடிப்பட்ட மீன்களையும் பொலிஸார் கையகப்படுத்தினர்.
மேற்படி 13 பேரையும்; வியாழக்கிழமை (23) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, மீனவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வலைகள் மற்றும் மீன்களை அழிக்குமாறு நீதவான் உத்தரவிட்டமைக்கமைய அவற்றை அழித்ததாக நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
4 hours ago