2025 ஜூலை 10, வியாழக்கிழமை

மாணவன் மீது வாள்வெட்டு

Suganthini Ratnam   / 2015 மே 03 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

மல்லாகம் சந்தி கே.கே.எஸ் வீதியால் சென்றுகொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவனை  நேற்று  சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், வாளால் வெட்டியதாக   தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

மல்லாகம் மகாவித்தியாலய உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் க.பிரசன்னா (வயது 19) என்ற மாணவன் தலையில் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்;.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை  இரவு மல்லாகம் சந்தியில் இரு இளைஞர்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த மாணவன் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .