2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மீள்குடியேறும் பகுதியில் கைக்குண்டு மீட்பு

Gavitha   / 2015 மே 11 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அண்மையில் மீளக்குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்ட வசாவிளான் பகுதியிலுள்ள காணியொன்றில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (10) கைக்குண்டொன்று மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் திங்கட்கிழமை (11) தெரிவித்தனர்.

காணி துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த காணியின் உரிமையாளர் ஒருவர் குண்டு இருப்பதை அவதானித்து, அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இராணுவத்தினரின் 511 படைப்பிரிவின் குண்டு செயலிழக்கும் பிரிவுடன் சென்று குண்டை மீட்டதாக பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .