2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஆலய வளாகத்திலிருந்து முதியவரின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2015 மே 12 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வளாகத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை (11) இரவு மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
 
மீட்கப்பட்டவரின் பெயர், விபரம் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் உறவினர்கள் யாராவது இருந்தால் 021 - 2263573 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கூறினர்.

ஆலயத்தில் தங்கியிருந்து தொண்டுகள் செய்து வந்த முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .