2025 ஜூலை 07, திங்கட்கிழமை

விபத்தில் இளைஞன் பலி

Thipaan   / 2015 மே 16 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

 

நல்லூர் செம்மணி வீதியில் கண்ணி வெடியகற்றும் நிறுவன வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை (16) மதியம் இடம்பெற்ற இச் சம்பவத்தில், நல்லூர் பகுதியினை சேர்ந்த சிவலிங்கம் சசிதரன் (வயது 25) என்பவரே உயிரிழந்தார்.

நல்லூரில் இருந்து முகமாலை நோக்கி சென்றுகொண்டிருந்த கண்ணி வெடியகற்றும் நிறுவன வாகனம் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வாகன சாரதியினை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .