2025 ஜூலை 05, சனிக்கிழமை

குடும்பப் பெண்ணை காணவில்லை

Menaka Mookandi   / 2015 மே 22 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். ஊர்காவற்றுறை, நாரந்தனையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரை கடந்த 11ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது உறவினர்கள், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ்.நிரோஜினி (வயது 20) என்பவரே இவ்வாறு காணாமற்போயுள்ளார். முல்லைத்தீவிலுள்ள தனது கணவனைச் சந்திப்பதற்காக செல்வதாகக்கூறி தனது 2 வயதுக் குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் கடந்த 11ஆம் திகதி சென்ற பெண், இதுவரையில் வீடு திரும்பவில்லை என பொலிஸ் முறைப்பாட்டில், உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  

கணவருடன் பெண் இருக்கின்றார் என நினைத்து இருந்த உறவினர்கள் பெண்ணைத் தேடவில்லை எனவும் இருப்பினும் அவர் கணவனிடம் செல்லவில்லையென்ற விபரம் தெரியவந்ததை அடுத்து பொலிஸ் முறைப்பாடு செய்வதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுரை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .