2025 ஜூலை 05, சனிக்கிழமை

புங்குடுதீவு சம்பவம்:பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

Princiya Dixci   / 2015 மே 22 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

புங்குடுதீவு மாணவி கொலைச்சம்பவத்தையடுத்து தீவகம் மற்றும் யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பதற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தத் தவறியமை மற்றும் நீதிமன்றக் கட்டடத்தின் மீதான தாக்குதல் சம்பவம் என்பவற்றைத் தடுக்கத்தவறியமையால் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 05 பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம், பொலிஸ்மா அதிபர் கே.என்.இலங்கக்கோனால் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியம் 1க்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.ஜே.ஏ.விஜயசேகர கிளிநொச்சிக்கும், யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியம் 2க்குப் (ஊர்காவற்றுறை) பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.கே.ஏ.சேனாரத்ன முல்லைத்தீவுக்கும், ஊர்காவற்றுறை தலைமைப்பீட பொலிஸ் பொறுப்பதிகாரி கியு.ஆர்.பெரேரா மன்னாருக்கும், யாழ்ப்பாணப் பொலிஸ் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்ஸ்மன் வீரசேகர சீதா எலியத்துக்கும், யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஆர்.பி.என்.பாலசூரிய வவுனியாவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பொலிஸ் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக புதிதாக டப்ளியூ.கே.ஜயலத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய இடமாற்றப்பட்டவர்களின் இடத்துக்கு கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் கடமையாற்றியவர்கள் வருகை தரவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .