2025 ஜூலை 05, சனிக்கிழமை

மின்சாரம் தாக்கி ஒருவர் படுகாயம்

Thipaan   / 2015 மே 23 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் மின் இணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த வீட்டு உரிமையாளர் மின்சாரம் தாக்கி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிருஸ்ணபிள்ளை சதீஸ்குமார் (வயது 35) என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை (23) காலை வீட்டின் மின் இணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த போது அதிக மின்சாரம் மின்சுற்றில் பாய்ந்துள்ளது.

உடனடியாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .