Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Menaka Mookandi / 2015 மே 25 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ற.றஜீவன்
யாழ்ப்பாணம், மருதங்கேணி, உடுத்துறை பகுதியில் மருதங்கேணி உப பொலிஸ் நிலைய பொலிஸாரை தாக்கிய இரண்டு சந்தேகநபர்களை திங்கட்கிழமை (25) கைது செய்ததாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.
கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடும் ஒருவரைக் கைது செய்யும் பொருட்டு, பொலிஸார் சிலர் சனிக்கிழமை (23) இரவு அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். கைது செய்ய வந்த பொலிஸாரை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பிடித்து, அடித்ததுள்ளதுடன் பொலிஸ் வாகனத்தையும் உடைத்து பொலிஸாரைத் துரத்தியுள்ளனர்.
மேலதிக பொலிஸார் மற்றும் ஆயுதங்களுடன் பொலிஸார் மீண்டும் சென்ற போதும், அந்தக் கும்பல் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதில் பொலிஸார் இழுபறிபட்டதில் பொலிஸார் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்து வயோபதிபர் படுகாயமடைந்தார். அவர் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து திங்கட்கிழமை (25) யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பொலிஸாரைத் தாக்க முற்பட்டார் என முதியவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை (25) இராணுவத்தினருடன் அங்கு சென்ற பொலிஸார், 2 சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
53 minute ago
3 hours ago
5 hours ago