2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அங்கவீனமுற்ற பிள்ளைகளுக்கு கல்வி உதவி

Thipaan   / 2015 ஜூன் 06 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

சமூக சேவைகள் அமைச்சின் அங்கவீனமுற்றோருக்கான தேசிய செயலகத்தால் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த அங்கவீனமுற்ற பிள்ளைகளுக்கு கல்வி உதவியை வழங்கி வருவதாக பிரதேச செயலகங்களின் பிரதிப் பணிப்பாளர் ச.பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதற்குரிய படிவங்களை பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவில் பெற்று தேவைப்படும் உதவி குறித்து அமைச்சுக்கு விண்ணப்பிக்க முடியும்.

10,000 ரூபாய்க்கு மேற்படாத தொகையை ஒரே தடவையில் வழங்கவுள்ளதாகவும், விண்ணப்பப்படிவத்துடன் மாணவரின் பாடசாலைக்கான வரவை உறுதிப்படுத்திய அதிபரின் கடிதமும் இணைக்கப்பட வேண்டும்.

இதனை விட அங்கவீனமுற்ற பிள்ளைகளுக்கு கல்வித் தேவைக்காக மாதாந்தம் 750 ரூபாய் உதவி வழங்கும் திட்டமும் உள்ளது என தெரிவித்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X