2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இனிப்பு வழங்கி சிறுமியை வன்புணர்வு செய்தவருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2015 ஜூன் 07 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், அச்செழு பகுதியில் 13 வயதுச் சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வு செய்த அதேயிடத்தைச் சேர்ந்த குளிர்பான விற்பனை நிலையத்தில் பணிபுரியும் இளைஞனை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்.சிறுவர் நீதிவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன் சனிக்கிழமை (06) உத்தரவிட்டுள்ளார்.

பாடசாலை செல்லும் சிறுமியை இளைஞன் இனிப்புக்கள் வழங்கி வன்புணர்வு செய்து வந்துள்ளான். இது தொடர்பில் அறிந்த சிலர், சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடம் இது தொடர்பில் தெரிவித்தனர்.

சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியமை தொடர்பில் சிறுவர் நன்னடத்தை அதிகாரியின் உதவியுடன் சிறுமியின் பெற்றோர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட அச்சுவேலி பொலிஸார் சந்தேகநபரான இளைஞனை வெள்ளிக்கிழமை (05) கைது செய்து, நீதிமன்ற அனுமதியுடன் மருத்துவ அறிக்கையைப் பெற்று, நீதவான் முன்னிலையில் சனிக்கிழமை (06) ஆஜர்ப்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X