2025 ஜூன் 30, திங்கட்கிழமை

புலிகள் பயன்படுத்திய வெடிபொருட்கள் மீட்பு

Menaka Mookandi   / 2015 ஜூன் 10 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், புத்தூர், நிலாவரை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் பகுதிக்குள் இருந்து விடுதலைப் புலிகள் பயன்படுத்திய வெடிபொருட்கள் புதன்கிழமை (10) மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

81 மில்லிமீற்றர் எறிகணை குண்டு ஒன்றும், 60 மில்லிமீற்றர் எறிகணைக்குண்டு ஒன்றும் ஆரூள் வெடிகுண்டுகள் சிலவும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இராணுவ முகாம் பகுதியை இராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை (09) துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டு, அவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X