Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஜூன் 10 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
யாழ். நீதிமன்றத்தின் மீது கடந்த மே மாதம் 20ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் நீதிமன்ற கதவை காலால் உதைத்து திறந்து உள்நுழைந்தார் என்ற குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை (09) கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், புதன்கிழமை (10) உத்தரவிட்டார்.
யாழ். நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களைத் தவிர, அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக சந்தேகநபர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் நடைபெற்ற தினத்தில் சேகரிக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களை வைத்து இந்தக் குழு விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேக நபர்களை கைது செய்து வருகின்றது. அதனடிப்படையில் விசாரணைகள் மேற்கொண்டு பழைய பூங்கா வீதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 Jun 2025
29 Jun 2025