2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கருவி மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஆண்டுவிழா

Menaka Mookandi   / 2015 ஜூன் 11 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை (12) நல்லூர் கல்வியங்காட்டு அருளம்பலம் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் சமூகவள நிலையத் தலைவர் க.தர்மசேகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நல்லூர் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபாசினி மதியழகனும், சிறப்பு விருந்தினராக இலங்கை மன்றக் கல்லூரியைச் சேர்ந்த க.ஐங்கரனும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

வரவேற்புரையை சமூகவள நிலைய செயலாளர் து.ஜசிந்தன் நிகழ்த்துவார். ஆசியுரைகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நல்லாயன் நிலையத்தைச் சேர்ந்த  அருட்திரு ஆர்..ஸ்ராலின், யாழ்ப்பாணம் சின்மயமிஷனைச் சேர்ந்த ஜாக்கிரத சைத்தெனிய சுவாமிகளும் நிகழ்த்தவுள்ளார்கள்.

இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகளும் வழங்கப்படவுள்ளன. சமூகவள நிலைய அங்கத்தவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X