2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பெண்ணை தாக்கி சங்கிலி அறுக்க முயற்சி

George   / 2015 ஜூன் 11 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -நா.நவரத்தினராசா 

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் வீடொன்றுக்குள் புதன்கிழமை(10) இரவு நுழைந்து பெண்ணின் தங்க சங்கிலியை அறுக்க முற்பட்டவர்கள் பெண்ணைத் தாக்கியதுடன், சங்கிலியின் ஒரு பாகத்தையும் அறுத்துச் சென்றதாக தெல்லிப்பழை பொலிஸார் கூறினர். 

மேற்படி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த சிலர் அங்கு திருடமுற்பட்ட வேளையில் வீட்டுக்காரர்கள் விழித்துக்கொண்டதையடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்று பிறிதொரு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் சங்கிலியை அறுத்துள்ளனர். 

சங்கிலியை அறுக்கவிடாமல் பெண் போராடியதையடுத்து, திருட வந்தவர்கள் பெண் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு சங்கிலியின் ஒரு பாகத்தை அறுத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X