2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தேவாலயத்துக்குச் சென்ற யுவதியை காணவில்லை

Menaka Mookandi   / 2015 ஜூன் 14 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியிலுள்ள தேவாலயத்துக்குச் சனிக்கிழமை (13) சென்ற சுன்னாகம் கிழக்குப் பகுதியை சேர்ந்த உ.ஸ்டெலா (வயது 20) என்ற யுவதியைக் காணவில்லையென யுவதியின் பெற்றோரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர்.

சனிக்கிழமை காலை தேவாலயத்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற யுவதி இதுவரையில் வீடு திரும்பவில்லையெனவும் எங்கு தேடியும் யுவதி கிடைக்கவில்லையெனவும் பொலிஸ் முறைப்பாட்டில், யுவதியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X