2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்றவர் கைது

Menaka Mookandi   / 2015 ஜூன் 18 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி, அரசடியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தரம் 7இல் கல்வி கற்கும் 6 மாணவர்களுக்கு போதைப் பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவரைக் வியாழக்கிழமை (18) கைது செய்துள்ளதாக யாழ்;ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து பாடசாலைக்கு வியாழக்கிழமை (18) சென்ற மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து மாணவர்களிடமிருந்து பாக்குகளை கைப்பற்றியுள்ளதுடன், மாணவர்களிடம் விசாரணையும் மேற்கொண்டனர்.

மாணவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பாக்கு விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .