Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஜூன் 18 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கி.பகவான்
யாழ்.தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு முன்பாக நடந்து சென்றவரை மோதிய சாரதி பயிற்சி கல்லூரியின் பயிலுநர் மற்றும் பயிற்சியாளர் ஆகியோரை தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் வியாழக்கிழமை (18) அனுமதியளித்தார்.
இந்தச் சம்பவத்தில் சரசாலை வடக்குப் பகுதியைச் சேர்ந்த பேரம்பு நல்லதம்பி (வயது 75) என்பவர் உயிரிழந்தார்.
சாரதி பயிலுநர், பிறேக் பிடிப்பதற்கு பதிலாக அக்ஸிலேட்டரை அழுத்தியமையால், வான் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வயோதிபர் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இது தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட சாவகச்சேரி பொலிஸார் சாரதி பயிலுநர் மற்றும் பயிற்சியாளரைக் கைது செய்து வியாழக்கிழமை (18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே மேற்படி உத்தரவை நீதவான் பிறப்பித்திருந்தார்.
50 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
1 hours ago