2025 ஜூன் 28, சனிக்கிழமை

போதைப்பாக்குடன் கைது செய்யப்பட்ட இந்திய சுற்றுலாப்பயணிக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2015 ஜூன் 19 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ்ப்பாணம், மந்திகைப் பகுதியில் போதைப் பாக்குடன் கைது செய்யப்பட்ட இந்திய சுற்றுலாப் பயணியை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் மா.கணேசராசா வியாழக்கிழமை (18) உத்தரவிட்டார்.

தமிழகம், திருப்பூரைச் சேர்ந்த சுப்பிரமணியம் செந்தில்குமார் (வயது 32) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 239 போதைப் பாக்குகள் கைப்பற்றப்பட்டன.

பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .