2025 ஜூன் 28, சனிக்கிழமை

போதைபொருள் பாக்கு தயாரிக்கும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

Thipaan   / 2015 ஜூன் 20 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

போதைபொருள் பாக்கு விற்பனையாளர்கள் இருவரையும் அவற்றை தயாரிக்க பயன்படுத்தும் உபகரணங்களையும் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.கே.வூட்லர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் வெள்ளிக்கிழமை (19) கைப்பற்றியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (18) பாடசாலை மாணவர்கள் இருவரிடம் இருந்து போதையூட்டிய பாக்கு கைப்பற்றப்பட்டது.

அது தொடர்பில் மாணவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம், வண்ணார்பண்ணை மற்றும் ஓட்டுமடத்தை சேர்ந்த இருவரை வியாழக்கிழமை (18) பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர்களிடம் இருந்து போதை பாக்கு தயாரிக்க பயன்படுத்தும் உபகரணங்களையும் கைப்பற்றினார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .