2025 ஜூன் 28, சனிக்கிழமை

இந்திய மீனவர்கள் 26 பேர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூன் 21 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இலங்கை கடற்பரப்பினுள்  அத்துமீறி நுழைந்து  மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில்  இந்திய மீனவர்கள் 26 பேர்  காங்கேசன்துறை கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (21) அதிகாலை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

நாகபட்டிணம் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த இந்த மீனவர்கள்  மூன்று  படகுகளில் வந்து  மீன்பிடியில் ஈடுபட்டுள்ளார்கள்.  

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் பருத்தித்துறை பொலிஸாரிடம் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டு, பின்னர்  மீனவர்களை யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் பொலிஸாரினால்  ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நீரியல் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .