2025 ஜூன் 28, சனிக்கிழமை

சிறுமிக்கு 100 ரூபாய் கொடுத்த முதியவர் கைது

Gavitha   / 2015 ஜூன் 21 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில், 9 வயது சிறுமிக்கு 100 ரூபாயைக் கொடுத்து அவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்த  65 வயதுடைய வயோதிபர் ஒருவரை சனிக்கிழமை (20) கைது செய்ததாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி குடிநீர் எடுப்பதாக அயல் வீட்டுக்குச் செல்வது வழக்கமாக  இருந்துள்ளது. வழமைபோல் வெள்ளிக்கிழமை (19) குடிநீர் எடுப்பதற்கு அயல் வீட்டுக்குச் சென்றபோது, அங்கு தனிமையில் இருந்து அயல் வீட்டு வயோதிபர், சிறுமிக்கு 100 ரூபாயை கொடுத்து சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சி செய்துள்ளார். இதன்போது அங்கிருந்து தப்பி வந்த சிறுமி நடந்தவற்றை பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

பெற்றோர் இது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த பின்னர் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .