2025 ஜூன் 28, சனிக்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2015 ஜூன் 21 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (21) அதிகாலை 5 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 26 இந்திய மீனவர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் உ.விஜயராணி உத்தரவிட்டார்.

இந்தியாவின் தமிழகம் மாநிலம், நாகப்பட்டிணம் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த இந்த மீனவர்கள், கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பருத்தித்துறை பொலிஸாரிடமிருந்து மீனவர்களைப் பொறுப்பேற்றுக்கொண்ட யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள், மீனவர்களை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .