2025 ஜூன் 28, சனிக்கிழமை

பாடசாலை சமையல் பொருட்களை திருடிய நால்வர் கைது

Menaka Mookandi   / 2015 ஜூன் 23 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், கற்கோவளம் மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் சமையல் அறையிலிருந்த சமையல் பொருட்களை ஞாயிற்றுக்கிழமை (21) இரவு திருடிய குற்றச்சாட்டில் அதேயிடத்தைச் சேர்ந்த 4 சந்தேகநபர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சமையல் அறையிலிருந்த 3 பெட்டி மீன்ரின், 2 கான் ஒயில் என்பன திருடப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்தனர். சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0

  • Jeya Thursday, 25 June 2015 11:13 AM

    Enna oru kevalam. jaffna engaa pokuthu. maanam pokuthu.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .