2025 ஜூன் 28, சனிக்கிழமை

பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் கைதான ஐவருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2015 ஜூன் 24 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கொடிகாமம், தவசிக்குளம் பகுதியில் கசிப்பு காய்ச்சிய ஒருவரை கைதுசெய்யச் சென்ற  பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் செவ்வாய்க்கிழமை (23) உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 22பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி பகுதியில் கசிப்பு காய்ச்சிய சந்தேகநபர் ஒருவரை கடந்த வெள்ளிக்கிழமை (19) இரவு பொலிஸார் கைது செய்தனர். இதன்போது, ஒன்றுகூடிய சிலர் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த இரண்டு பொலிஸார் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு சனிக்கிழமை (20) சென்ற பொலிஸார், பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் 12 பெண்கள் 5 ஆண்கள் (கசிப்பு காய்ச்சியவரும் சேர்த்து) என மொத்தம் 17 பேரைக் கைது செய்து, பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தி, சந்தேகநபர்கள் எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மேலும் 5 சந்தேகநபர்கள் திங்கட்கிழமை (22) கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .