2025 ஜூன் 28, சனிக்கிழமை

மோட்டார் சைக்கிளை தீக்கிரையாக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Menaka Mookandi   / 2015 ஜூன் 24 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் கடந்த 18ஆம் திகதி இரவு இடம்பெற்ற குழு மோதலில் மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை புதன்கிழமை (24) கைது செய்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் கூறினர்.

குழு மோதலில் ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றைய குழுவைச் சேர்ந்தவர்களைத் துரத்திச் சென்றுள்ளனர். இதில் கைவிடப்பட்ட சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்ற குழுவினர் தீக்கிரையாக்கப்பட்டது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரைக் கைது செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .