2025 ஜூன் 28, சனிக்கிழமை

தந்தையை கொல்வேன் என அச்சுறுத்தி மகளிடம் வன்புணர்வு

Menaka Mookandi   / 2015 ஜூன் 25 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தந்தையைக் கொலை செய்வேன் எனக்கூறி சேர்ந்த 20 வயதுடைய யுவதியை பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவமொன்று யாழ். பருத்தித்துறை, குடத்தனை மேற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இன்று வியாழக்கிழமை (25) முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சந்தேகநபர் தலைமறைவாகி உள்ளதாகவும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

யுவதியின் அத்தானுடைய நண்பரான சந்தேநபர், மேற்படி யுவதியை அச்சுறுத்தி நள்ளிரவு வேளையில் வன்புணர்வு கொண்டுள்ளார். உடலில் மாற்றங்கள் தென்பட்டதையடுத்து.

வைத்தியசாலைக்கு யுவதி சிகிச்சைபெறச் சென்ற சமயம் இது தொடர்பில் வீட்டுக்காரர்கள் அறிந்து கொண்டு பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .