2025 ஜூன் 26, வியாழக்கிழமை

யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து 529,239பேர் வாக்களிக்க தகுதி

Menaka Mookandi   / 2015 ஜூலை 09 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இருந்து 5 இலட்சத்து 29 ஆயிரத்து 239பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று யாழ். மாவட்ட உதவித் தேர்தலகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்தது.

11 தேர்தல் தொகுதிகளைக் கொண்ட யாழ். தேர்தல் மாவட்டத்தின் ஊர்காவற்றுறை தொகுதியில் 22,057பேரும், வட்டுக்கோட்டையில் 47,621பேரும், காங்கேசன்துறையில் 63,217 பேரும், மானிப்பாயில் 54,567பேரும், கோப்பாயில் 55,891பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன், உடுப்பிட்டியில் 39,204பேரும், பருத்தித்துறையில் 36,138பேரும், சாவகச்சேரியில் 51,702 பேரும், நல்லூரில் 46,699பேரும், யாழ்ப்பாணம் தொகுதியில் 33,050பேரும், கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் 79,093பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அலுவலகம் மேலும் கூறியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .