Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 11 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகள் யாழ். மாவட்ட செயலக உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (10) வேட்புமனுத்தாக்கல் செய்தபோது, மாவட்டச் செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த வாகனம் ஒன்றால் குழப்ப நிலையேற்பட்டது.
முக்கிய கட்சிகள் வேட்புமனுத் தாக்கல் செய்வதால் நேற்று காலை முதல் மாலை வரையில் மாவட்டச் செயலகத்துக்கு அருகிலுள்ள ஏ – 9 வீதி மூடப்படும் எனவும் வாகனங்கள் எவையும் யாழ். மாவட்டச் செயலகத்துக்குள் உள்நுழைய முடியாது என யாழ். தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எவ்.யு.வூட்லர் வியாழக்கிழமை (09) தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், யாழ்.மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்த வாகனம் ஒன்று மாவட்டச் செயலகத்தின் நுழைவாயிலில் நிறுத்திவிட்டு, அதிலிருந்து ஒருவர் இறங்கி உள்ளே சென்று மீண்டும் வெளியில் சென்றுள்ளார்.
இதனால் குழப்பமடைந்த அங்கு நின்றவர்கள் இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.
தொடர்ந்து, உதவித் தேர்தல் ஆணையாளருக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது. பொலிஸார் இது தொடர்பில் விசாரணை செய்யும் உதவித் தேர்தல் ஆணையாளர் கூறினார்.
வேட்புமனுத்தாக்கல் செய்ய வருகை தந்த கட்சியினர் கூட தங்கள் வாகனங்களை பொலிஸாரின் தடுப்பு எல்லையிலேயே நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
4 hours ago