Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Sudharshini / 2015 ஜூலை 11 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
யாழ். நீதிமன்றத்தின் மீது கடந்த மே மாதம் 20ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 8 பேருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணை முறியில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் க.கேசவன் வெள்ளிக்கிழமை (10) அனுமதி வழங்கினார்.
அத்துடன், மிகுதி 26 பேரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமை, யாழ். நகரப்பகுதியில் குழப்பம் விளைவித்தமை தொடர்பில் 130 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பிரிவு பிரிவாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதில் நீதிமன்றம் மீது தக்குதல் மேற்கொண்டமை, சிறைச்சாலை வாகனத்தினை சேதமாக்கியமை, கடமையில் இருந்த பொலிஸாரை காயப்படுத்தியமை ஆகிய மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கபட்டிருந்த 34 பேருடைய வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரனையின் போது மேற்படி 8 பேரும் பிணையில் செல்ல பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்காததை அடுத்து, பதில் நீதவான் இவர்களை பிணைமுறியில் செல்ல அனுமதித்தார்.
புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவியின் படுகொலையைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போதே, மேற்படி அசம்பாவிதங்கள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
4 hours ago