Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Sudharshini / 2015 ஜூலை 12 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நா.நவரத்தினராசா
குப்பிளான் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை சனிக்கிழமை (11) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
சுன்னாகம் பொலிஸ் பகுதிக்குட்பட்ட குப்பிளான் தைலங்கடவைப் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் அற்ற பற்றைகள் நிறைந்த பகுதியில் சிலர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சுன்னாகம் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் குறித்த இடத்தை சுற்றி வளைத்துள்ளனர்.
இந்நிலையில் இருவர் பிடிபட ஒருவர் பற்றைகள் ஊடாக தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 24 போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய பொருட்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் மற்றையவரையும் தேடும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
4 hours ago