2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கலாசார விழுமியங்களை அபிவிருத்தி செய்ய நிதியுதவி

Kogilavani   / 2015 ஜூலை 14 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வடக்கு மாகாணத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக கலாசார விழுமியங்களை மேம்படுத்தி, அவற்றை அபிவிருத்தி செய்வதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் தலா 3 இலட்சம் ரூபாய் நிதியுதவியை வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சு வழங்கியுள்ளதாக அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் உஷா சுபலிங்கம் திங்கட்கிழமை(13) அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவித்தார்.

இந்நிதியைக் கொண்டு மேற்கொள்ள வேண்டிய 6 நிகழ்ச்சித் திட்டங்களையும் ஒவ்வொரு நிகழ்ச்சித் திட்டத்தை மேற்கொள்வதற்கான ஒதுக்கீட்டுத் தொகை அளவையும் உள்ளடக்கிய அட்டவணையை நிதியுடன் சேர்த்து அமைச்சு அனுப்பி வைத்துள்ளதாக அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

பிரதேச செயலக பிரிவுகளில் அமைந்துள்ள கலை மன்றங்களின் அபிவிருத்தி, கலை அபிவிருத்தி தொடர்பான பயிற்சி வழங்கல், பிரதேசம் சார்ந்த வெளியீடுகள், கலாசார விழாக்கள், கலாசார விழிப்புணர்வுகள், ஆவணப்படுத்தல் ஆகிய 6 நிகழ்ச்சித் திட்டங்கள் இந்நிதி மூலம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .