Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூலை 14 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பளை, வீமன்காமம் பகுதியில் தற்காலிகமாக போடப்பட்டிருந்த கொட்டிலொன்று, இனந்தெரியாதோரால் திங்கட்கிழமை இரவு (13) தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
மக்களின் குடிநீர் பாவனைக்கென வலி. வடக்கு பிரதேச சபையால் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (14) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதென காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால், தற்காலிக கொட்டிலில் வைக்கப்பட்டிருந்த மேசன் உபகரணங்கள் அழிவடைந்தமையால் சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் வரையில் நட்டம் எற்பட்டுள்ளது.
பொதுமக்கள் இரவு எட்டுமணியுடன் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறி விடுவதால் பொருட்கள் போதிய பாதுகாப்பு அற்ற நிலையில் இருப்பது வழமையாகும். இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago